2021 பாடசாலை முதலாம் தவணை, முதல் கட்டம் நிறைவு

2021 பாடசாலை முதலாம் தவணை, முதல் கட்டம் நிறைவு-2021-1st Phase of the 2nd Term School Closed from Feb 25 2021-2nd Phase Will be Begins on March 15

- மார்ச் 15 இல் இரண்டாம் கட்டம்
- இதுவரை திறக்கப்படாத பாடசாலைகளும் திறப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2021 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (24) நிறைவடைகிறது.

இதேவேளை, 2020 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைககள், எதிர்வரும் மார்ச் 1 முதல் மார்ச் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதால், முதலாம் தவணையின் முதல் கட்டத்தை நாளை (25) வியாழக்கிழமையுடன் நிறைவு செய்ய முடிவு செய்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை மேல் மாகாணத்தில் திறக்கப்படாத பாடசாலைகள் உள்ளிட்ட, இதுவரை திறக்கப்படாத பாடசாலைகள் மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, தற்போது விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகளுக்கு முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமும் அதே தினத்தில், மார்ச் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள பாடசாலைகளை பெப்ரவரி 15ஆம் திகதி திறக்க திட்டமிட்டபோதிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பரிந்துரைக்கமைய அது பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/24/2021 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை