ஜனாஸாக்கள் தகனதிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் செய்யப்படுவதற்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டம் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்றுக் காலை முன்னெடுக்கப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில், ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதோடு, பதாதைகளும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில், பொது அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Mon, 01/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை