சுகாதார நடைமுறையை பின்பற்றி தைப்பொங்கல்

- இந்துக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுரை

தைப்பொங்கல் பண்டிகை, நாளை கொண்டாடப்படவுள்ளதோடு இந்துக்கள் நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாட்டங்களை மேற்கொள்ளுமாறு சுகாதார  அமைச்சு தெரிவித்துள்ளது. முடிந்தளவு நடமாட்டங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சமூக இடைவெளியை உச்சளவில் அணுகுமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவுப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுமுறை தினம் என்பதால் முடிந்தளவு பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் வெளியில் செல்வதை தவிர்த்து குடும்பங்களுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளை மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக வீடுகளிலேயே தங்கியிருப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை