தேசபற்றுமிக்க ஒரு ஜனாதிபதி எமக்கு கிடைத்தமை நாம் செய்த பாக்கியம்

- அமைச்சர் ஜனக பண்டார

ஊழல்கள், களவு, துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக செயற்படக்கூடிய திறமைமிக்க ஒரு ஜனாதிபதி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைத்தமை நாம் செய்த பாக்கியமாகும் என  அரசு சேவைகள் உள்ளூராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டத்தில் கலந்து கண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு    தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,  கடந்த நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் சம்பந்தமாக  தெரிந்துகொள்ள தற்போது இருக்கும் அரச நிறுவனங்களில் போய் பார்த்தால் விளங்கும். கடந்த நாலரை ஆண்டு காலமாக அவர்கள் என்ன புரிந்துள்ளார்கள் என்பதை நன்றாக புரிந்து  கொள்ள முடியும். கடந்த நல்லாட்சி அரசில் இடம்பெற்ற ஊழல்கள் மோசடிகள், துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஒரு தேசபற்றுமிக்க ஒரு ஜனாதிபதி எமக்கு கிடைத்தமை பற்றி உண்மையிலேயே நாம் அவருக்கு நன்றி கடன் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.  

உக்குவளை விஷேட நிருபர்

Fri, 01/01/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை