நீதி கிடைக்கும் வரையில் கறுப்புச் சால்வை போராட்டம்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரையில் பாராளுமன்றத்திற்குள் கறுப்பு நிற சால்வையொன்றை அணிந்திருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தின் போது கறுப்பு நிற சால்வையொன்றை தனது கழுத்தில் அணிந்து கொண்ட

ஹரீன் பெர்ணாண்டோ எம்.பி, இனி சகல சபை அமர்வுகளிலும் இந்த சால்வையை அணிந்திருப்பேன் என்றும் கூறினார். 

தமது குடும்ப அதிகாரத்தை காட்டுவதற்கு சிலர் சால்வையை போடுவது போன்று நானும் கறுப்பு நிற சால்வையை இனி இந்த சபையில் அணிந்திருப்பேன். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரையில் இதனை அணிந்திருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 01/21/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை