வவுனியாவில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

வடக்கிலிருந்து 551 பேர் பங்கேற்பு

பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற் தகுதிகாண் பரீட்சை வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (26) காலை 08 மணி முதல் நடைபெற்றது. இப் பரீட்சையில் வடமாகணத்தைச் சேர்ந்த 551 பரீட்சார்த்திகள் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் கடந்தவருடம் நடைபெற்றிருந்தன. நேற்றையதினம் அவர்களுக்கான உடற்தகுதிகாண் பரீட்சைகள் நடைபெற்றன. வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால் டி சில்வாவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொலிஸ் உயர் அதிகாரிகள், மற்றும் சுகாதார பிரிவினர் கலந்துகொண்டனர்.

ஓமந்தை விசேட நிருபர்

Wed, 01/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை