தென் கொரியா செல்லும் முதலாவது பணியாளர் குழு

22 இலங்கையர் நேற்று பயணம்

22 இலங்கையரைக் கொண்ட முதல் குழுவினர் வேலைவாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு (21) காலை சிறப்பு விமானமொன்றில் புறப்பட்டுச் சென்றனர். இலங்கைத் தொழிலாளர்கள் 22 பேரும் புறப்பட்டுச் செல்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இவர்கள் தென்கொரியாவுக்குச் சென்றதும் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

கொவிட்-19 பரவலைத் தடுக்க கொரியக் குடியரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின்படி 2021 ஜனவரி 01 முதல் கொரியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் செல்லுபடியாகும் பி.சி.ஆர் சோதனை அறிக்கையை சமர்ப்பித்தல் கட்டாயமாகும்.

இந்த பிசிஆர் அறிக்கை, கொரியாவினுள் நுழைவதற்கு முன் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

இதேவேளை பி.சி.ஆர் சோதனை அறிக்கை இல்லாத தொழிலாளர்கள் கொரிய அரசினால் நாடு கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 01/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை