இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

உழவர் திருநாளாம் தை திருநாளில் தமிழர்கள் வாழ்வில் ஒளி பிறக்கவும் சமூகத்தின் வாழ்வில் புதியதோர் திருப்பம் சகவாழ்வு கிட்டவும் வழி பிறக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தைத்திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பல்வேறு சோதனைகளை சந்தித்த பின்னர் தமிழ் சமூகம் இன்று புதியதொரு இவற்றில் மறுமலர்ச்சியை நோக்கி நகரும் இந்த காலகட்டத்தில் நம் சமூகத்தின் முடிவுக்கு இந்த தைத் திருநாளில் நல்லருள் கிட்ட வேண்டுமென வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

தை பிறந்தால் வழி பிறக்குமென்ற சான்றோரின் வாக்கு கேட்க நம் வாக்குக் கேற்ப நம் அனைவரது வாழ்விலும் நல்லொளி கிட்டவும் இந்த நன்னாளில் நம் சமூகத்தின் வறுமை நீங்கவும் நம் அனைவர் வாழ்விலும் நல்ல எதிர்காலம் பிறக்கவேண்டுமென அனைவரும் பிரார்த்திப்போமாக குறிப்பாக நமது பாரம்பரிய தொழிலான உழவுத் தொழிலில் ஏற்றம் கிடைக்கவும் கிடைக்கவும்

வழி பிறக்க வேண்டும் தைத் திருநாளில் தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஓங்கட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 01/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை