மரண தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜென் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (11) வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 14 பேரும், மஹர சிறைச்சாலையில் மேலும் 75 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
Sat, 12/12/2020 - 13:53
from tkn