‘செல்பி’ எடுக்க முயன்ற பெண் மலையில் இருந்து விழுந்து பலி

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது மலை மேலிருந்து விழுந்து மரணமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள கிராம்ப்பியன்ஸ் தேசியப் பூங்காவில் அந்தச் சம்பவம் நடந்ததாக சி.என்.என் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சம்பவம் நடந்த நாளன்று ரோசி லூம்பா என்ற 38 வயது பெண் அவரது கணவருடனும் பிள்ளையுடனும் அங்கு சென்றிருந்தார். அவர் செங்குத்தான மலை மேல் தெரிந்த அழகிய இயற்கைக் காட்சியுடன் சேர்ந்து செல்பி எடுக்க விரும்பினார்.

அவர் அங்கிருந்த எச்சரிக்கைப் பலகைகள், பாதுகாப்பு அம்சங்கள் எதையும் பொருட்படுத்தாமல் தாண்டிச் சென்றதாக சி.என்.என் குறிப்பிட்டது.

அங்கிருந்த கல்லின் மேல் நின்று படம் பிடிப்பதற்குத் தயாரான அவர் கால் தடுமாறி மலையிலிருந்து விழுந்தார்.

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை