கொரோனா பரவல் குறைவடையலாம்
டாக்டர் சுதத் சமரவீர தெரிவிப்பு
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொவிட்-19 பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம் என தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சுதத் சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸை பரப்புகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது.
அதேநேரம் நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பீ.சீ.ஆர்.பரிசோதனைகளில், அவர்களது மாதிரிகளில் கொரோனா வைரஸின் செறிமானம் குறைவாக உள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் எதிர்வரும் காலத்தில் கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
from tkn
Post a Comment