நாளைய பேச்சுவார்த்தையில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்

- சம்பள உயர்வு தொடர்பாக அமைச்சர் ஜீவன் நம்பிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். சம்பளம் மாத்திரம் இவர்களுக்கு பிரச்சினை இல்லை. தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு  சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்

கொட்டகலை , கெமர்ஷியல் பகுதியில் ஈரவலைய பூங்கா வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

பெருந்தோட்ட தொழில் கேவலமானதல்ல. தொழில்துறையை நடத்தும் முறையே கேவலமானது. கௌரவமாக  நவீனமுறையில் தேயிலை தொழிற்துறையை முன்னெடுத்தால் தொழிலாளர்கள் இத் துறையிலிருந்து வெளியேற மாட்டார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் 435 தோட்ட பிரிவுகள் காணப்படுகிறன. அத்தனை பிரிவுகளிலும் தேயிலை மலைப்பகுதிகளில் ஓய்வு அறை அமைக்கப்படும்.  அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். அது எனக்கு அவசியமற்றது.  தொழிலாளர்களின் நலன் கருதி திட்டத்தை முன்னெடுப்பேன். அதே போல எனது அமைச்சினூடாக வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது விரைவில் இந்திய வீட்டுத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் மேலும் மலையக பல்கலைகழகம் இல்லை என்று பலர் குறைகூறித்திரிந்தார்கள் இப்போது இடம் ஒதுக்கி நிதியும் ஒதுக்கியாச்சி எங்கே குறைகூறியவர்கள் ஏன் பாராட்டவில்லை என்றார்.

அத்தோடு நான் அமைச்சுப் பதவியை பெற்ற காலம் மிகவும் கஷ்ட காலம்.  உலகமே கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ள காலம், இருப்பினும் ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்புடன் மக்களுக்கு தேவையான விடயங்களை முன்னெடுப்பேன் .

அதுபோலத்தான் இந்த ஈரவலைய பூங்கா எனும் இத்திட்டம் ஆரம்பிப்பதால்  மேலும் பல அபிவிருத்திகளை எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் முன்னெடுக்க வாய்ப்புகள் உண்டு.

ஹற்றன் விசேட, ஹற்றன் சுழற்சி, நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள்

Sun, 12/20/2020 - 17:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை