- சடலம் PCR பரிசோதனைக்கு
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எம் நிலந்த திடீரென மரணமடைந்துள்ளார்.
இன்று (26) காலை காலி முகத்திடல் வெளியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென வீழ்ந்துள்ளார்.
அதன் பின்னர் அவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
43 வயதான, பசறை பிரதேசத்தில் வசிக்கும் இவர், ஏற்கனவே இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
மரணமடைந்தவரின் உடல் PCR பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thu, 11/26/2020 - 14:32
from tkn