சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி கூட்டம் யாழில் அமைச்சர் நாமல் தலைமையில்

சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான கூட்டமானது யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட குழுவினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கூட்டத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ், இராஜாங்க அமைச்சர்கள், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், அமைச்சிக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை