நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா அதிசக்தி வாய்ந்தது

- பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர்ச்சித் தகவல்
- மிகுந்த அவதானமாக இருக்க மக்களுக்கு வேண்டுகோள்

நாட்டில் தற்போது  பரவிவரும் கொரோனா வைரஸ் 'B.1.42' என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என  ஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொவிட் -19 அலை தொற்றுநோய்  அதிவேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக குறித்த ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே கம்பஹா மாவட்ட, மினுவாங்கொடை கொரோனா கொத்தணி இலங்கை முழுவதும் பரவியுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு  வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sun, 11/01/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை