விடுதிகளில் தங்கியுள்ளோருக்கு இராணுவத் தளபதி முக்கிய அறிவிப்பு

பொது விடுதிகளில் தங்கியிருந்து வேலைக்குச் செல்பவர்கள், விடுதியிலுள்ள ஏனையவர்கள் தொடர்பான தகவல்களை, பணியாற்றும் நிறுவனத்தின் பிரதானிகளிடம் தெரியப்படுத்துமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு இது உதவியாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் நூற்றுக்கு 45 வீதமானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் கொத்தணியில் நேற்று புதிதாக 194 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை