ஐ.பி.எல்: பரபரப்பான போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 70 ஓட்டங்களையும், கிரன் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், செல்டோன் கொட்ரேல், மொஹமட் ஷமி மற்றும் கிருஸ்னப்பா கௌதம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 193 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ஓட்டங்களால் வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, நிக்கோலஸ் பூரான் 44 ஓட்டங்களையும், மாயங் அகர்வால் 25 ஓட்டங்களையும், கிருஸ்னப்பா கௌதம் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை விரைவாக குவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சகலதுறை வீரர் கிரன் பொலார்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

Sat, 10/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை