சிரியாவில் ரஷ்ய வான் தாக்குதலில் பலர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணத்தில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 50க்கும் அதிகமான துருக்கி ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்திருக்கும் இந்தத் தாக்குதல் அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் வன்முறைகள் அதிகரித்திருப்பதை காட்டுவதாக உள்ளது.

இஸ்லாமியவாத குழுவான பைலன் அல் ஷாம்மின் பயிற்சி முகாம் ஒன்றே தாக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் இத்லிப்பில் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு இந்தத் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 78 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இத்லிப்பின் வட மேற்கு பிராந்தியமான ஹரேமில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதல் கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதலாகும்.

சிரியாவின் ஒன்பது ஆண்டு சிவில் யுத்தத்தில் அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாதிக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியாகி இத்லிப் உள்ளது. மார்ச் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது சிரிய ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தினால், தங்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் உரிமை உண்டு என்று துருக்கி அரசு கூறியது.

ரஷ்யா சிரியா அரசையும், துருக்கி கிளர்ச்சியாளர்களையும் ஆதரிக்கின்றன.

 

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை