அப்துல் சத்தாருக்கு பிரதமர் வழங்கிய இரு புதிய பதவிகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்பு செயலாளராகவும் குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னணியின் செயலாளர் அப்துல் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அலரி மாளிகையில் வைத்து அப்துல் சத்தாரிடம் கையளித்தார். பிரதமர் தலைமையிலான அரசியல் பணிகளில் நீண்ட காலமாக நெருங்கி செயற்பட்டுவரும் இவர், அரச ஹஜ் குழுவின் அங்கத்தவராகவும் ஏற்கனவே கடமையாற்றி வருகிறார். இவர் குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரி மற்றும் தலைமன்னார் வி.ரி.எம்.எஸ் வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவருமாவார்.

 

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை