"800" திரைப்படத்திலிருந்து விலகிக்ெகாள்ளுங்கள்

விஜய் சேதுபதிக்கு முரளிதரன் கடிதம்

‘800’ திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என தனக்கு இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அனுப்பியுள்ள கடிதத்தை நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளதாவது;என் மீதுள்ள தவறான புரிதலால் ‘800’ படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன்.

எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.

அது மட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைப் பயணத் தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை. அவை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது.

திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஓர் உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்.

அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முரளிதரன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளி தரனின் அறிக்கையைக் குறிப்பிட்டு நன்றி வணக்கம் எனப் பதிவிட்டுள்ளார்.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை