ரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது

ரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது-Rishad Bathiudeen MP who had been evading the police for 5 days, was arrested by the CID this morning

நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் யோசனை

கடந்த 5 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 6 குழுக்களால் தேடப்பட்டு வந்த அவரை, அத்திணைக்களத்தின் வர்த்தக குற்ற விசாரணை இலக்கம் 02 பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குற்றப் புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் விசாரணை மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னர், இன்றையதினம் (19) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Mon, 10/19/2020 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை