இரு பிரிவு மோதலில் ஒருவர் பலி

மொரட்டுவையில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

நேற்றிரவு (01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வந்துராதெனியவுக்கு திரும்பும் சந்திக்கு அருகில், இரு குழுவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த நபர், ஹீகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

பஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.(சு)

Wed, 09/02/2020 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை