சம்பிக்க ரணவக்க நாட்டை விட்டு வெளியேற தடை

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது.  2016இல் கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற  வாகனவிபத்து தொடர்பில் விசாரணைகள் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றவேளை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்கவேண்டாமென குடிவரவு,குடியகல்வு திணைக்கள ஆணையாளருக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சம்பிக்க ரணவக்கவின் வாகனச்சாரதி துசித குமாரவை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 இல் கொழும்பு இராஜகிரியவில் விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து சம்பிக்க ரணவக்க அந்த பகுதியிலிருந்து தப்பிச்சென்றார். பின்னர் அவ்வேளை வாகனத்தை செலுத்திய சாரதியை பொலிஸில் ஆஜராக்கினார் என குற்றச்சாட்டுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை