நீதிமன்ற தடையையும் மீறி உண்ணாவிரத போராட்டம்

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர விதிக்கப்பட்ட தடை உத்தரவைக் கண்டித்து சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு முன்பாக நேற்று காலை 09 மணி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டம் நேற்று மாலை 05 மணி வரை தொடர்ந்தது.

அத்துடன் காலை 10.48 மணிக்கு திலீபன் மௌனித்த நேரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்

Sun, 09/27/2020 - 07:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை