கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

2020 ஆம் ஆண்டுக்கான ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி’ இன்று (18) ஆரம்பமாகின்றது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் 22 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக இம்முறை சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளுக்கமைவாக நடைபெறவுள்ளது. 

இன்று (18) தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டப வளவில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

 

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை