சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா

தேசிய ரீதியாக பாடசாலைகளுக்கு இடையிலான, நாவலப்பிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி முடிவுகளின் படி, மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் பங்குபற்றிய போட்டி நிகழ்ச்சியில் தரம் 03 பெண்கள் பிரிவிலும், தரம் 04 ஆண்கள் பிரிவிலும் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை வெற்றி கொண்டனர்.

மேற்படி மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மருதமுனை அல்-மனார் பெண்கள் ஆரம்பப் பிரிவின் அதிபர் முகைதீன் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் மாணவர்களுக்கு பயிற்சியளித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ஆர்.றிஷாப், ஏ ஜே.துவைஜ் அஹமட் மற்றும் எம்.எச்.நிஷாத் ஆகியோருக்கும் வாழ்த்துக்களும் கெளரவங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொறுப்பாசிரியர்களான பி.எம்.எம்.சைபுத்தீன் மற்றும் முஹம்மட் ஹமீஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாவிதன்வெளி தினகரன் நிருபர்

 

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை