கொழும்பில் இன்றிரவு 8 மணி முதல் 12 மணிநேர நீர் வெட்டு

அவசர திருத்த வேலை காரணமாக கோட்டை பகுதியில் (கொழும்பு 1) 12 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்றிரவு (17) 8.00 மணி முதல் நாளை (18)  காலை 8.00 மணி வரை குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை கொம்பனித்தெரு (கொழும்பு 2), கொள்ளுப்பிட்டி (கொழும்பு 3), கறுவாத்தோட்டம் (கொழும்பு 7), பொரளை (கொழும்பு 8), தெமட்டகொடை (கொழும்பு 9), மருதானை, பஞ்சிகாவத்தை (கொழும்பு 10), புறக்கோட்டை (கொழும்பு 11) ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Thu, 09/17/2020 - 13:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை