TNA இவ்வாரம் கூடி முடிவு −மாவை
20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கட்சியின் பாராளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது. அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் இந்த வாரம் எங்கள் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் போது இது குறித்து ஆராயப்படும்.
20வது திருத்தத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்தும் ஆராயப்படும். ஏற்கனவே எங்கள் சட்டத்தரணிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம் என்றார்.
Tue, 09/08/2020 - 06:00
from tkn