மஸ்கெலியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் குளவிக்கொட்டினால் 13 தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாக வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.
மேலும்,இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 13 தொழிலாளர்களில் 10 தொழிலாளர்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியதாகவும், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தோட்டத்தில் கொழுந்து பறித்திக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குளவிக் கூடுகளை அகற்ற உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர்
from tkn