கொவிட் 19 பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுங்கள்

இரத்தினபுரி மாநகர சபை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தொடர்ந்தும் பின்பற்றுமாறு இரத்தினபுரி பிரதேச மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இரத்தினபுரி மாநகர சபையின் சுகாதார பிரிவு ஒலிபெருக்கி மூலம் மேற்படி அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இரத்தினபுரி சமன் தேவாலயத்தின் மகா பெரஹரா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் இதுதொடர்பான அறிவித்தல்களை இரத்தினபுரி மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு விடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொடர்பிலான கட்டுப்பாடுகளில் சிறு தளர்வுகள் காணப்படுகின்ற போதிலும் சமூகத்திலிருந்து கொரோனா முற்றாக நீங்கிவிட்டது என்று அர்த்தமில்லையென இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அனோஜ் றொட்றிகோ நேற்று தெரிவித்தார்.

முகக்கவசம் அணிவதில் மக்களின் அவதானம் குறைந்து வருகின்ற போதிலும் உரிய பாதுகாப்பு அறிவுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றுவதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை இரத்தினபுரி சமன் தேவாலயத்தின் பெரஹரா முழுமையான பாதுகாப்பு நிபந்தனைகளுடன் நடத்தப்படவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை