எனது மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பால் மட்டற்ற மகிழ்ச்சி

புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின் மஹிந்த ராஜபக்‌ஷ டுவிட்டர் பதிவு

எனது மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷதெரிவித்துள்ளார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் களனி ரஜமகா விகாரையில் பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின்னர், அது தொடர்பில் தனது டுவிட்டரில் பதவிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, எனது மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பால் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இலங்கையர்கள் எனக்குக் கொடுக்கும் நம்பிக்கை, எனது தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்யத் தூண்டுகிறது.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முற்போக்கான பயணத்தை மேற்கொள்ளும் என்பதை நான் உறுதி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Mon, 08/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை