வலைப்பந்தாட்ட, கரப்பந்தாட்டப் போட்டி

இலங்கைத் தோட்டச்சேவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு :

இலங்கைத் தோட்டச்சேவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சங்க அங்கத்தவர்களுக்கு இடையே கரப்பந்தாட்டம் மற்றும் வலைப் பந்தாட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியும் ஆண்களுக்காக கரப்பந்தாட்டப் போட்டியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி இராகலை தமிழ் மகா வித்தியாலய மைதானத்திலும் ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டி ஹற்றன் தரவல மைதானத்திலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆரம்ப நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின. பெண்களுக்கான வலைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கைத் தோட்டச்சேவையாளர் சங்கத்தின் அவிசாவளை கிளையும், ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கைத் தோட்டச்சேவையாளர் சங்கத்தின் தலவாக்கலை கிளையும் வெற்றி பெற்றன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு அதிதிகளாகக் கலந்து கொண்ட இலங்கைத் தோட்டச்சேவையாளர் சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்க மற்றும் பொதுச்செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் வெற்றிக் கேடயங்களை கையளித்தனர்.

(நாவலப்பிட்டி சுழற்சி, அக்குறணை குறூப் நிருபர்கள்)

Sat, 08/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை