இலங்கையரை அழைத்துவரும் செயற்பாடுகள் ஒத்திவைப்பு

தேர்தல் முடிந்ததும் மீண்டும் தொடரும் 

வெளிநாடுகளிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி துபாயிலுள்ள 660 இற்கும் மேற்பட்ட இலங்கையர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

அதன் பின்னர், மாலைதீவு, அவுஸ்திரேலியா, கட்டார், ஓமான், பஹ்ரேய்ன், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தல் கடமைகளில் பாதுகாப்புப் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் ஈடுபடவுள்ளதால் வெளிநாடுகளிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 08/05/2020 - 11:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை