தேசியப் பட்டியல் 10ஆம் திகதி வெளியீடு
பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்கு வெளியிடும் நடவடிக்கைகள் நாளை 08ஆம் திகதி காலை 06 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
அதேவேளை தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பட்டியலை 10ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு எண்ணப்படும் சமயத்தில் அரசியல் கட்சி அல்லது சுயாதீன குழுக்களின் பிரதிநிதிகளுக்கு வாக்கெண்ணும் நிலையத்தின் பிரதம அதிகாரியின் அனுமதியுடன் வாக்கெண்ணும் மண்டபத்திற்குள் பிரவேசிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
தெரிவத்தாட்சி அலுவலரினால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட கட்சி அல்லது சுயாதீன குழுக்கள் தொடர்பில் அறிவிப்பு செய்த பின்னர் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகள் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn