விக்னேஸ்வரனின் பேச்சு ஒரு சில தமிழ் ஊடகங்களில் மிகைப்படுத்தல்

அதனால் தமிழருக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை

பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வன் சபையில் ஆற்றிய உரை தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லையென்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களும் நிச்சயம் நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் மக்கள்   கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார். “இலங்கையின் பூர்வீக மொழி சிங்களம் அல்ல தமிழ் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த உரையால் நாம் குழப்பம் அடையவில்லை என்றும், ஏனெனில் விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Mon, 08/24/2020 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை