மக்கள் சேவையை பிரதானமாக கடைப்பிடிப்பது எம்.பிக்களின் கடமை

பாராளுமன்ற செயலமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா

பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் சேவையை பிரதானமாகக் கொள்ள வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன வலியுறுத்தினார். 

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல வருடங்களுக்கு பின்னர், இன்று இலங்கையில் முழுமையானதொரு பாராளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தோம்.

இவை அனைத்தும் எமக்கான ஒரு பாடமாகத்தான் கருதுகிறோம். 

இலங்கையில் தற்போது காணப்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில்தான் இந்தப் பாராமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  விசேடமாக புதிய அரசியலமைப்பொன்று இன்று நாட்டுக்கு தேவைப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

ஒரு நாட்டில் இதயமாகக் கருதப்படும் பாராளுமன்றத்தில், எதிர்காலத்தில் எந்தவொரு தவறும் இருந்துவிடக்கூடாது என்றுதான் நாம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளோம். மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதியாக அனைவரும் திகழ வேண்டும்” என தெரிவித்தார்.

Wed, 08/26/2020 - 08:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை