டெல்லி கெபிடல்ஸ் அணியில் விளையாட தென்னாபிரிக்க வீரர் ஒப்பந்தம்

ஐ.பி.எல். ரி-20தொடரில் பங்கேற்கும் டெல்லி கெபிடல்ஸ் அணி, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் என்ரிச் நோட்ஜேவை தங்களது அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. 

நடப்பு தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக, இந்திய மதிப்பில் 1.50கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கிறிஸ் வோக்ஸ், இங்கிலாந்து அணியில் தொடர்ந்து விளையாடுவதற்காக நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகினார். 

ஆகையால், அவருக்கு பதிலாக தற்போது 26வயதான வலக்கை வேகப்பந்து வீச்சாளரான என்ரிச் நோட்ஜேவை டெல்லி கெபிடல்ஸ் அணி, ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாடும் 11ஆவது தென்னாபிரிக்க வீரராக என்ரிச் நோட்ஜே தனது பெயரை பதிவுசெய்துக் கொண்டார்.  பந்துவீச்சாளர் என்ரிச் நோட்ஜே, கடந்த வருடம் இந்திய மதிப்பில் 20இலட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். எனினும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். 

டெல்லி கெபிடல்ஸ் அணியில் ஏற்கனவே கார்கிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா, கீமோ போல், மோஹித் சர்மா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Thu, 08/20/2020 - 14:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை