சீ.சீ.ரி.வி யில் சிக்கிய திருடன்

டிக்கோயாவில் சம்பவம்

ஹட்டன் டிக்கோயாப் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சீ.சீ.ரி.வி கமராவின் உதவியுடன் சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று காலை வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை திறந்து வைத்து விட்டு வீட்டின் சமையலறை பக்கம் சென்ற வேளை வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த சந்தேகநபர் பணம், மீள்நிரப்பும் அட்டைகள், சிகரெட்கள் என்பவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைபாட்டுக்கமைய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்படி, வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமரா பரிசோதிக்கப்பட்ட போது கொள்ளையிடும் காட்சி அதில் பதிவாகியிருந்தமை தெரியவந்தது.

பின்னர் சீ.சீ.ரி.வி கமரா உதவியோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 30ஆயிரம் ரூபா பணம், ஒரு தொகை மீள்நிரப்பும் அட்டைகள் மற்றும் ஒரு தொகை சிகரெட்கள் என்பவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாமிமலை மானிலு தோட்டபகுதியை சேர்ந்தவர் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Thu, 08/27/2020 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை