ஐ.தே.கட்சி தேசிய பட்டியல் ருவன் விஜேவர்தனவுக்கு

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் கூடி ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. 

நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியால் பெற்றுக் கொள்ள முடிந்தது. மொத்தமாகப் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலமான ஆசனம் ஐ.தே.க.வுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்குக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே வேளை கட்சியின் முக்கிய பதவிகளில் ஏற்படுத்தப்படவிருக்கும் மாற்றங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் கட்சியின் உப தலைவர் ரவி கருணா நாயக்க தெரிவித்தார்.   

Mon, 08/10/2020 - 10:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை