நேற்று மாலை சம்பவம்
கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை 05மணியளவில் கனகபுரம் - டிப்போ வீதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கிளிநொச்சி காந்திகிராமத்தை சேர்ந்த 18வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் உயிரிழந்துள்ளார். இதேநேரம் உயிரிழந்த மற்றைய இளைஞனின் தகவல்கள் எதுவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புதுமுறிப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். இதன்போது டிப்போ - கனகபுரம் வீதியில் மாவீரர் துயிலுமில்லம் பகுதி வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வேலி தூண்களில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியதுடன், 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்ச் செல்வன்
from tkn