கைதிகளை பார்வையிட 15 முதல் அனுமதி

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அண்மையில் வெலிகடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கைதியொருவர் அடையாளங்காணப்பட்டமையை தொடர்ந்து சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் உறவினர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது. என்றாலும் கடும் வரையறைகளின் அடிப்படையில் தான் இந்த சந்தர்ப்பம் உறவினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Mon, 08/10/2020 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை