தேசியப் பட்டியல் எம்.பி பெயர்களை கையளிக்க 14 வரை காலக்கெடு

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கிடைத்த பின்னர் பொதுத்தேர்தல் தேசியப் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே வேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.தமது கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரத்தினை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன தெரிவித்துள்ளன. தேசியப்பட்டியல் எம்.பி தொடர்பில் பல கட்சிகளில் இழுபறி நிலை உள்ளது.

Mon, 08/10/2020 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை