வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்

செனரத்கம பிரதேசத்தில் புகையிரதமொன்று தடம்புரண்டுள்ளதன் காரணமாக, வடக்கு நோக்கிய புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (16) கொழும்பு, கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை பயணித்த புகையிரதம், செனரத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக, வடக்கு புகையிரத மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள், கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரத கட்டுப்பாட்டறை மேலும் தெரிவித்துள்ளது.

தடம்புரண்ட புகையிரதத்தை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Fri, 07/17/2020 - 08:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை