மத்துகமை, வெல்கந்தல பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டத்தின் கீழ் நிலத்தடியில் பதிக்கப்பட்டு வரும் குழாய்களின் தரம் குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும சோதனையிட முற்பட்ட வேளை குறித்த திட்டத்தினை பொறுப்பெடுத்து நடத்தும் ஒப்பந்தக்காரர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித்த தேவரப்பெரும களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் தொடர்பில் தெரிவித்த மத்துகமை பொலிஸார்; இரு தரப்பினருக்குமிடையே தாக்குதல் இடம்பெற்றதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
களுத்துறை சுழற்சி நிருபர்
Thu, 07/23/2020 - 08:13
from tkn