பேராசிரியர் ஹூல் உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

இன்று ஆஜராகுமாறு பணிப்பு

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் இன்று 23 ஆம் திகதி, கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு, பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.  

சிரேஷ்ட சட்டத்தரணி கே.கணேஷயோகனின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகளான தனுஷன் கணேஷயோகன், அனுஷா ராமன், அச்சினி ரணசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஆர். சிவேந்ரன் முன்வைத்த விஷேட விளக்கங்களை ஆராய்ந்தே வணிக மேல் நீதிமன்றின் நீதிபதி டி.எப்.எச். குணவர்தன, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

Thu, 07/23/2020 - 07:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை