சுகாதார அமைச்சர் பவித்ரா மக்களிடம் வேண்டுகோள்
மக்கள் எமக்கான ஒத்துழை ப்பை வழங்கினால் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து நாம் மீண்டுவர முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா இன்று உலகளாவிய ரீதியான சவாலாக காணப் படுகிறது. எனினும், இதனை எம்மால் கட்டுப்படுத்த முடியுமென்று நாம் உறுதியாக நம்புகிறோம் என்றார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான 700 PCR பரிசோ தனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனைகளின் அடிப்படையில் 443 கைதிகளும் 63 அதிகாரிகளும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 26 பேரும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கிணங்க மொத்தமாக 530 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த இரண்டரை மாதங்களாக நாட்டில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படாமைக்கு மக்களின் ஒத்துழைப்பு தான் பிரதான காரணமாகும். மக்களுக்கு நாம் மிகவும் கௌரவமளிக்கிறோம். நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைவரும் சுகாதார ஆலோசனைகளை கடைபிடித்தனர்.
இதனூடாகவே சமூகத் தொற்றாக இந்த வைரஸ் பரவல் காணப்படவில்லை. இப்போது கந்தகாடு மத்திய நிலையத்தின் ஊடாக இந்த விடயத்தில் சற்று பின்னடைவொன்று ஏற்பட்டுள்ளது.
இவ்வேளையில் நாம் மக்களிடம் ஒன்றைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம். அதாவது, கடந்த காலங்களில் எமக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினீர்களோ அதேபோல் இனியும் செயற்ட்டு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
from tkn