தனிப்பட்ட தகராறினால் ஒருவர் பலி

இங்கிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல ஊருகல பிரதேசத்தில் நேற்று (24) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக, இரும்பு பொல்லினால்  தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Sat, 07/25/2020 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை