சஜித் - ரணில் பிளவென்பது அரங்கேற்றப்படும் நாடகம்

ரணில் மற்றும் சஜித் அணிகள் அரங்கேற்றுவது ஒரு நாடகமாகும். தேர்தலின் பின்னர் இருதரப்பினரும் இணைந்துக் கொள்வரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதால் பலரை ஐ.தே.க. கட்சியைவிட்டு நீக்கியுள்ளது. நீக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் நன்கு பரிசீலித்தோம். அதில் சஜித் பிரேமதாசவின் பெயர் எங்கும் இல்லை. ரணில் - சஜித் பிளவு என்பது பொய்யான விடயம். இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Fri, 07/31/2020 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை