பட்டதாரிகள் விழிப்படைந்து அரசியலுக்குள் வர வேண்டும்

பட்டதாரிகள் விழிப்படைந்து அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் , வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவருமான ம. ஆனந்தராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் போட்டியிடும் சுயேட்சைக் குழு 19 இன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

அனைத்து பட்டதாரிகளினாலும் அனைத்து விடயங்களையும் செய்ய முடியும் என்று நான் சொல்ல வரவில்லை. தகுதியான பட்டதாரிகள் முன்வரவேண்டும். வன்னித் தேர்தல் தொகுதி வரலாற்றில் முதல் முறையாக பட்டதாரிகள் அணியொன்று உயர் கல்வி சமூகத்தின் அபிவிருத்தி சார்பு அரசியலில் நீண்டகால அனுபவம் மற்றும் ஆளுமை கொண்ட வேட்பாளர்களை இணைத்து இத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

கட்சியின் யாப்பின் பிரகாரம் அபிவிருத்தி சார்பு கொள்கை விளக்கப்பரப்புரைகள் மேற்கொண்டு மக்கள் விரும்புகின்ற அவர்களினால் எதிர்பார்க்கப்படும் துறைசார்ந்த நிரந்தர பொருளாதார கட்டமைப்புக்களை கொண்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிந்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படுகின்றது . இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் என்றார்.

 

 

வவுனியா நிருபர்

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை