பிளவுபடாத நாட்டிற்குள் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு

வடக்கு, கிழக்கு மக்களது பிரச்சினைகளை நன்குணர்ந்தவர் ஜனாதிபதி

குருநாகல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மஹிந்த

பிளவுபடாத நாட்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்க எமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூடத்தில் தொடர்ந்து பேசிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு கிழக்கில் நீண்ட காலம் பணியாற்றியவர்.அப் பகுதி மக்களின் பிரச்சினைகளை அவர் நன்குணர்ந்தவர்.

தற்போது நாடாளுமன்ற பெரும்பான்மை இன்மை காரணமாகவே ஜனாதிபதியால் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.

மேலும் ஜனாதிபதியின் திட்டங்களுக்கு ஆதரவளிக்ககூடிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய உடனேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு அஞ்சியமையினாலேயே கடந்த அரசாங்கத்தால் மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். 

Wed, 06/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை